Friday, November 25, 2011

நபிகள் நாயகம் சூனியம் செய்யப்பட்டார்களா?


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யூதனொருவன் சூனியம் செய்ததாகவும் 113, 114 ஆகிய இரண்டு அத்தியாயங்களும் அருளப்பட்டு அதன் மூலம் சூனியம் விலகியதாகவும் பரவலாக முஸ்லிம்களால் நம்பப்படுகிறது.

இது பற்றி விரிவாக அறிந்து கொள்வது அவசியம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது. தாம் செய்யாததைச் செய்ததாக அவர்கள் நினைக்கும் அளவுக்கு அதன் விளைவு இருந்தது. ஒரு நாள் அவர்கள் (இறைவனிடம்) பிரார்த்தனை செய்தனர். மீண்டும் பிரார்த்தனை செய்தனர். பின்னர் என்னிடம் ‘நான் விளக்கம் கேட்ட விஷயத்தில் இறைவன் விளக்கம் தந்து விட்டான். என்னிடம் இருவர் வந்து ஒருவர் தலைமாட்டிலும், மற்றொருவர் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். 

இவருக்கு என்ன நேர்ந்துள்ளது என ஒருவர் கேட்டார். சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று மற்றவர் கூறினார். சூனியம் வைத்தவன் யார் என ஒருவர் கேட்க, லபீத் பின் அஃஸம் என மற்றவர் விடையளித்தார். எதில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என ஒருவர் கேட்க சீப்பு, உதிர்ந்த தலைமுடி, பேரீச்சை மரத்தின் பாளை ஆகியவற்றில் வைக்கப்பட்டுள்ளது என்று மற்றவர் கூறினார். எந்த இடத்தில் என்று ஒருவர் கேட்க தர்வான் எனும் கிணற்றுக்குள் என்று மற்றவர் கூறினார்’ என்று கூறினார்கள். 

பின்னர் அங்கே புறப்பட்டுச் சென்று பின்னர் திரும்பி வந்தனர். அங்குள்ள பேரீச்சை மரங்களின் மேற்பகுதி ஷைத்தானின் தலையைப் போல் இருப்பதாகவும் கூறினார்கள். அதை வெளியேற்றி விட்டீர்களா என்று நான் கேட்டேன். ‘இல்லை: அல்லாஹ் எனக்கு நிவாரணம் தந்து விட்டான். மக்கள் மத்தியில் தீமைகள் பரவுவதை நான் அஞ்சுகிறேன்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். பின்னர் கிணறு மூடப்பட்டது என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

இது புகாரி 3268-வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சிறு மாற்றங்களுடன் புகாரியின் வேறு சில எண்களைக் கொண்ட ஹதீஸ்களிலும் இடம் பெற்றுள்ளது. (பார்க்க புகாரி 5763, 5765, 5766, 6063, 6391)

தமது மனைவியருடன் தாம்பத்திய உறவு கொள்ளாமலே உறவு கொண்டதாக அவர்கள் நினைக்கும் அளவுக்கு நிலைமை இருந்தது என்றும்(புகாhp - 5765), இந்த நிலை ஆறு மாதங்கள் நீடித்ததாக அஹ்மத் 23211 வது ஹதீஸூம் கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் இந்த ஹதீஸ்கள் யாவும் ஏற்கத்தக்க அறிவிப்பாளர்கள் வழியாக அறிவிக்கப்படுபவை. ஆயினும் இவ்வாறு நடந்திருக்க முடியாது என்று கருதும் அளவுக்கு வேறு பல சான்றுகளும் கிடைக்கின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை இறைத்தூதர் எனக் கூறிய போது அதை ஏற்க மறுத்தவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறியே நிராகரித்தனர். இந்தக் குற்றச்சாட்டை திருக்குர்ஆன் மறுக்கிறது.

அநியாயக்காரர்கள் தாம் நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டதாக கூறுகின்றனர் என்று 17:47, 25:8 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
‘சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதனையே பின்பற்றுகிறீர்கள்’ என்று அநீதி இழைத்தோர் இரகசியமாகக் கூறியதையும், (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் செவியேற்ற போது எதைச் செவியேற்றார்களோ அதையும் நாம் நன்கு அறிவோம்.    திருக்குர்ஆன் (17:47)

அல்லது இவருக்கு ஒரு புதையல் வழங்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருந்து அதிலிருந்து இவர் உண்ணக் கூடாதா? என்றும் ‘சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள்’ என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர்.      திருக்குர்ஆன் 25:8

நபிமார்கள் பலரும் இவ்வாறு விமர்சிக்கப்பட்டதாக 26:153, 26:185, 17:101 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

‘நீர் சூனியம் செய்யப்பட்டவராகவே இருக்கிறீர்’ என்று அவர்கள் கூறினர்.  திருக்குர்ஆன் 26:153

‘நீர் சூனியம் செய்யப்பட்டவர்’ என்று அவர்கள் கூறினர்.   திருக்குர்ஆன் 26:185
தெளிவான ஒன்பது சான்றுகளை மூஸாவுக்கு வழங்கினோம். அவர்களிடம் அவர் வந்த போது (நடந்ததை) இஸ்ராயீலின் மக்களிடம் கேட்பீராக! ‘மூஸாவே! உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே நான் கருதுகிறேன்’ என்று அப்போது அவரிடம் ஃபிர்அவ்ன் கூறினான்.    திருக்குர்ஆன் 17:101

நபிமார்களுக்கு குறிப்பாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்க முடியாது என்று இவ்வசனங்கள் கூறுகின்றன. அவ்வாறு கூறுபவர்கள் அநியாயக்காரர்கள், நிராகரிப்பவர்கள் எனவும் இவ்வசனங்கள் கூறுகின்றன.
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூனியம் வைக்கப்பட்டனர் எனக் கூறும் ஹதீஸ்களில் அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டதாகத் தான் கூறப்படுகிறது. உடல் பாதிப்பையாவது பொருட்படுத்தாமல் விட்டு விடலாம். மனநிலை பாதிப்பை சாதாரணமாகக் கருத முடியாது.

செய்யாததைச் செய்ததாகக் கூறுவதும், தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் ஈடுபட்டதாக எண்ணுவதும் கடுமையான மனநிலை பாதிப்பைக் காட்டுகின்றன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தாம் என்ன செய்கிறோம் என்பதைக் கூட நினைவில் வைக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது உண்மையாக இருந்தால் அந்த ஆறு மாத காலத்தில் அவர்களுக்கு அருளப்பட்ட வேதம், அவர்கள் பேசிய பேச்சுக்கள் அனைத்தும் சந்தேகத்திற்குரியதாகி விடும். குர்ஆனுடைய ஒவ்வொரு வசனத்திலும் இதனால் சந்தேகம் ஏற்பட்டு விடும். ‘இது ஏன் அந்த ஆறு மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக இருக்க முடியாது’ என்ற கேள்வி எழும். ஒவ்வொரு ஹதீஸிலும் இது போன்ற கேள்விகள் எழும்.

ஆனால், இம்மார்க்கத்தை, திருக்குர்ஆனை நாமே பாதுகாப்போம் என்று அல்லாஹ் உறுதி மொழி தருகிறான்.
இந்த அறிவுரையை நாமே அருளினோம். நாமே அதைப் பாதுகாக்கவும் செய்வோம் (திருக்குர்ஆன் 15:9)

இவ்வேதத்தைப் பாதுகாப்பது என்றால் அதைக் கொண்டு வந்தவரின் மனநிலையை முதலில் பாதுகாத்தாக வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனநிலையே பாதிக்கப்பட்டால் திருக்குர்ஆன் பாதுகாக்கப்படாத நிலை ஏற்பட்டு விடும். இதன் காரணமாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டிருக்க முடியாது என்று விளங்கலாம்.

மனிதர்களையே அல்லாஹ் தனது தூதர்களாக நியமிக்கிறான். அவர்கள் அனைவரும் மனிதத் தன்மையுடன் தான் அனுப்பப்பட்டனர். தங்களைப் போலவே மனிதராக இருப்பவர், தங்களைப் போலவே உண்பவர், குடும்பம் நடத்துபவர் எப்படி இறைவனின் தூதராக இருக்க முடியும் என்ற எண்ணம் தான் தூதர்களை அம்மக்கள் நம்ப மறுத்ததற்குக் காரணமாக இருந்தது.

தங்களைப் போலவே உள்ள ஒரு மனிதரை இறைவனின் தூதர் என்று மக்கள் ஏற்க மறுப்பது இயல்பானது தான் என்பதால் தான் எல்லாத் தூதர்களும் தம்மைத் தூதர்கள் என்று மெய்ப்பிக்க அற்புதங்கள் வழங்கப்பட்டு அனுப்பப்பட்டனர். எந்தத் தூதரும் அற்புதம் வழங்கப்படாமல் அனுப்பப்படவில்லை.(3:184, 7:101, 9:70, 10:13, 10:74, 35:25, 40:22, 40:50, 57:25, 64:6)

அற்புதங்கள் மூலம் தான் இறைத்தூதர்கள் தமது தூதுத்துவத்தை நிரூபிக்க முடியும் என்றிருக்கும் போது இறைத்தூதராக இல்லாதவரும், இறைவனின் எதிரிகளாக இருப்போரும் இறைத்தூதர்கள் செய்வதைப் போன்று அற்புதங்கள் நிகழ்த்தினால் இறைத்தூதர்களின் அற்புதத்தை மக்கள் நம்ப மாட்டார்கள். உம்மைப் போலவே உமது எதிரிகளும் செய்கிறார்களே என்று கேட்டு விடுவார்கள். இந்த அடிப்படையைக் கவனத்தில் கொண்டு சிந்தித்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டிருக்க முடியாது என்று விளங்கலாம்.

ஏதோ ஒரு கிணற்றில் ஏதோ ஒரு பொருளை மறைத்து வைத்தது அல்லாஹ்வின் தூதரின் மனநிலையை மாற்றியது என்றால் இது மிகப் பெரிய அற்புதமே. இத்தகைய அற்புதம் நடந்திருந்தால் இதையே காரணமாகக் காட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மக்கள் நிராகரித்திருப்பார்கள்.

‘அல்லாஹ் உங்களைத் தூதராக நியமித்ததை நாங்கள் பார்க்கவில்லை; நீங்கள் செய்து காட்டிய சில அற்புதங்கள் காரணமாகவே உங்களைத் தூதர் என நம்பினோம்; இப்போது உங்களையே புரட்டிப் போடும் அளவுக்கு உங்கள் எதிரிகள் அற்புதம் நிகழ்த்திக் காட்டிவிட்டதால் உங்களை எப்படி இறைத்தூதராக நாங்கள் ஏற்போம்’ என்று கேட்டிருப்பார்கள்.

ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை. இறைத் தூதர்களுக்கு எதிராக இத்தகைய நிகழ்ச்சியை நடத்திக் காட்டி நம்பிக்கை கொண்ட மக்களை அல்லாஹ் தடம் புரளச் செய்ய மாட்டான் என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டிருக்க முடியாது என்று தெரிகிறது.

மேலும் மூஸா நபியவர்கள் தம்மை இறைத்தூதர் எனக் கூறிய போது அதை எதிரிகள் சூனியம் எனக் கூறினார்கள். சூனியக்காரர்களுடன் போட்டிக்கும் ஏற்பாடு செய்தனர்.

போட்டிக்கு வந்த சூனியக்காரர்கள் செய்த வித்தையைப் பற்றி அல்லாஹ் கூறும் போது ‘மகத்தான சூனியத்தைச் செய்து காட்டினர்’ எனக் கூறுகிறான். (7:116)

அவர்கள் செய்த மகத்தான சூனியத்தினால் செய்ய முடிந்தது என்ன என்பது பற்றியும் திருக்குர்ஆன் கூறுகிறது.

‘அவர்கள் தமது கைத்தடிகளையும், கயிறுகளையும் போட்ட போது அவர்களின் சூனியம் காரணமாக அவை சீறுவது போல் அவருக்குத் தோற்றமளித்தது’ என்று 20:66 வசனம் கூறுகிறது.

அவர்கள் செய்தது சூழ்ச்சி தான் என்று 20:69 வசனம் கூறுகிறது.
‘உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்’ (என்றும் கூறினோம்.)   திருக்குர்ஆன் 20:69

அவர்கள் மக்களின் கண்களை வயப்படுத்தி பயமுறுத்தினார்கள் என்று 7:116 வசனம் கூறுகிறது.

‘நீங்களே போடுங்கள்!’ என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர்.  திருக்குர்ஆன் (7:116)
சூனியத்தின் மூலம் கண்களை ஏமாற்ற முடியுமே தவிர உண்மையில் எதையும் மாற்ற முடியாது என்பது இவ்வசனங்களின் மூலம் தெரிகிறது. சூனியம் என்பதற்கு மதிமயக்குதல்  திசைதிருப்புதல் என்றும் பொருள்கொள்ளலாம் .பின்வரும் வசனம் மற்றும் ஹதீஸ்கள் மூலம் இதனை விளங்கிக் கொள்ளலாம்

 ‘பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!)’ என்று கேட்பீராக! ‘அல்லாஹ்வே’ என்று கூறுவார்கள். ‘எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்?’ என்று கேட்பீராக!(23:88-89)
நிச்சயமாக பயானில் ஸிஹ்h; உள்ளது - புகாhp : 5146

பயானின் மூலம் ஒருவரை முடக்கவோ நோயாக்கவோ செய்ய முடியாது. ஆனால், அவரைக் கவரும் வகையில் பயான் செய்ய முடியும். அவர் விளங்கியிருந்த கருத்தை மாற்றி நம்முடைய கருத்துக்கு திருப்ப முடியும். இதுதான் ஸிஹ்ர் என்ற வார்த்தையின் பொருளாகும். மேற்கண்ட வசனத்திலும் ஸிஹ்ர் என்ற சொல்     அந்த பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உண்மையாகவே மனநிலை பாதிப்பு ஏற்பட்டதாக மேற்கண்ட ஹதீஸ்கள் கூறுவது இதற்கு முரணாக அமைந்துள்ளது. மேலும் நபிமார்கள் அற்புதங்கள் கொண்டு வந்த போது எதிரிகள் அதை சூனியம் என்று கூறினார்கள். (பார்க்க திருக்குர்ஆன் 5:110, 6:7, 10:2, 10:76, 15:15, 21:3, 10:77, 27:13, 28:36, 34:43, 37:15, , 46:7, 54:2, 74:24, 61:6)
மூஸா (அலை)

அப்போது அவர் தமது கைத் தடியைப் போட்டார். உடனே அது உண்மையாகவே பாம்பாக ஆனது. அவர் தமது கையை வெளியே காட்டினார். உடனே அது பார்ப்போருக்கு வெண்மையாகத் தெரிந்தது. ‘இவர் தேர்ந்த சூனியக்காரராக (ஸிஹ்ர் செய்பவராக) உள்ளார். உங்கள் பூமியிலிருந்து உங்களை வெளியேற்ற இவர் எண்ணுகிறார். என்ன கட்டளையிடப் போகிறீர்கள்?’ என்று ஃபிர்அவ்னின் சமுதாயப் பிரமுகர்கள் கூறினர்.
திருக்குர்ஆன் 7:107, 108, 109

அவர்களுக்குப் பின்னர் மூஸாவையும், ஹாரூனையும் ஃபிர்அவ்னிடமும், அவனது சபையோரிடமும் நமது சான்றுகளுடன் அனுப்பினோம். அவர்கள் ஆணவம் கொண்டனர். குற்றம் செய்த கூட்டமாக இருந்தனர். நம்மிடமிருந்து அவர்களுக்கு உண்மை வந்த போது ‘இது தெளிவான சூனியம் (ஸிஹ்ர்)’ என்றனர். ‘உண்மை உங்களிடம் வந்திருக்கும் போது அதைச் சூனியம் (ஸிஹ்ர்) என்று கூறுகிறீர்களா? சூனியக்காரர்கள் (ஸிஹ்ர் செய்பவர்கள்) வெற்றி பெற மாட்டார்கள்’ என்று மூஸா கூறினார். திருக்குர்ஆன் 10:75, 76, 77

‘நீர் உண்மையாளராக இருந்தால் அதைக் கொண்டு வாரும்’ என்று அவன் கூறினான். அவர் தமது கைத்தடியைப் போட்டார். உடனே அது பெரிய பாம்பாக ஆனது. தமது கையை வெளிப்படுத்தினார். அது பார்ப்போருக்கு வெண்மையாக இருந்தது. ‘இவர் திறமை மிக்க சூனியக்காரர் (ஸிஹ்ர் செய்பவர்)’ என்று தன்னைச் சுற்றியிருந்த சபையோரிடம் அவன் கூறினான். ‘தனது (ஸிஹ்ர்) சூனியத்தின் மூலம் உங்களை உங்கள் பூமியிலிருந்து வெளியேற்ற இவர் நினைக்கிறார். நீங்கள் என்ன உத்தரவிடுகிறீர்கள்? (என்றும் கேட்டான்).
திருக்குர்ஆன் 26:31, 32, 33, 34, 35

மூஸா அவர்களிடம் நமது தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது ‘இது இட்டுக்கட்டப்பட்ட (ஸிஹ்ர்) சூனியம் தவிர வேறில்லை; இது பற்றி முன்னோர்களான எங்களது மூதாதையரிடம் நாங்கள் கேள்விப்படவில்லை’ என்றனர்.                           திருக்குர்ஆன் (28:36)

மூஸாவிடமும் (படிப்பினை) இருக்கிறது. அவரைத் தெளிவான சான்றுடன் ஃபிர்அவ்னிடம் அனுப்பிய போது, அவன் தனது பலத்தின் காரணமாகப் புறக்கணித்தான். ‘இவர் சூனியக்காரரோ (ஸிஹ்ர் செய்பவரோ) பைத்தியக்காரரோ’ எனக் கூறினான்.                       திருக்குர்ஆன் 51:38, 39

உமது கையை உமது சட்டைப் பையில் நுழைப்பீராக! அது எவ்விதத் தீங்குமின்றி வெண்மையாக வெளிப்படும். ஃபிர்அவ்னிடமும் அவனது சமுதாயத்திடமும் ஒன்பது சான்றுகளுடன் (செல்வீராக!) அவர்கள் குற்றம் புரியும் கூட்டமாகவுள்ளனர் (என்றான்). நமது சான்றுகள் பார்க்கக் கூடிய வகையில் அவர்களிடம் வந்த போது ‘இது தெளிவான சூனியம் (ஸிஹ்ர்)’ என்று அவர்கள் கூறினர். அவர்கள் அதை உறுதியாக நம்பியிருந்தும் அநியாயமாகவும், ஆணவமாகவும் மறுத்தனர். ‘குழப்பம் செய்தோரின் முடிவு எவ்வாறு இருந்தது?’ என்று கவனிப்பீராக!              திருக்குர்ஆன் 27:12, 13, 14

மூஸாவை நமது சான்றுகளுடனும், தெளிவான ஆற்றலுடனும் ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் ஆகியோரிடம் அனுப்பினோம். ‘பெரும் பொய்யரான சூனியக்காரர்’ என்று அவர்கள் கூறினர்.         திருக்குர்ஆன் 40:24
ஈஸா (அலை)

‘மர்யமின் மகன் ஈஸாவே! உமக்கும், உமது தாயாருக்கும் நான் வழங்கிய அருட் கொடையையும், ரூஹுல் குதுஸ் மூலம் உம்மை வலுப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! தொட்டிலிலும், இளமைப் பருவத்திலும் மக்களிடம் நீர் பேசினீர்! உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் நான் கற்றுத் தந்ததையும் எண்ணிப் பார்ப்பீராக! என் விருப்பப்படி களிமண்ணால் பறவை வடிவத்தைப் படைத்து அதில் நீர் ஊதியதையும், என் விருப்பப்படி அது பறவையாக மாறியதையும், என் விருப்பப்படி பிறவிக் குருடரையும் வெண் குஷ்டமுடையவரையும் நீர் குணப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இறந்தோரை என் விருப்பப்படி (உயிருடன்) வெளிப் படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இஸ்ராயீலின் மக்களிடம் தெளிவான சான்றுகளை நீர் கொண்டு வந்தீர்! அப்போது ‘இது தெளிவான சூனியமேயன்றி வேறில்லை’ என்று அவர்களில் (ஏக இறைவனை) மறுப்போர் கூறிய போது, அவர்களிடமிருந்து நான் உம்மைக் காப்பாற்றியதையும் எண்ணிப் பார்ப்பீராக! என்று அல்லாஹ் (ஈஸாவிடம்) கூறியதை நினைவூட்டுவீராக!                      திருக்குர்ஆன் 5:110

‘இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதர். எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப் படுத்துபவன். எனக்குப் பின்னர் வரவுள்ள அஹ்மத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன்’ என்று மர்யமின் மகன் ஈஸா கூறியதை நினைவூட்டுவீராக! அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது ‘இது தெளிவான சூனியம்’ எனக் கூறினர்.       திருக்குர்ஆன் 61:6
முஹம்மது (ஸல்)

(முஹம்மதே!) காகிதத்தில் எழுதப்பட்ட வேதத்தை உமக்கு நாம் அருளியிருந்து அதைத் தம் கைகளால் தொட்டுப் பார்த்தாலும். ‘இது வெளிப்படையான சூனியத்தைத் தவிர வேறு இல்லை’ என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறியிருப்பார்கள்.    திருக்குர்ஆன் 6:7

மக்களை எச்சரிப்பீராக! என்றும், நம்பிக்கை கொண்டோருக்குத் தம் இறைவனிடம் அவர்கள் செய்த நற்செயல் (அதற்கான கூலி) உண்டு என நற்செய்தி கூறுவீராக! என்றும் மனிதர்களைச் சேர்ந்த ஒருவருக்கு நாம் அறிவிப்பது அவர்களுக்கு ஆச்சரியமாக உள்ளதா? ‘இவர் தேர்ந்த சூனியக்காரர்’ என்று (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர்.
திருக்குர்ஆன் 10:2

அவர்களின் உள்ளங்கள் அலட்சியம் செய்கின்றன. ‘இவர் உங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு யார்? பார்த்துக் கொண்டே இந்த சூனியத்திடம் செல்கிறீர்களா?’ என்று அநீதி இழைத்தோர் மிகவும் இரகசியமாகப் பேசுகின்றனர்.     திருக்குர்ஆன் 21:3

நம்மிடமிருந்து அவர்களிடம் உண்மை வந்த போது ‘மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டது போன்றது இவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதா?’ எனக் கூறுகின்றனர். இதற்கு முன் மூஸாவுக்கு கொடுக்கப்பட்டதை அவர்கள் மறுக்கவில்லையா? ‘இரண்டும் ஒன்றை ஒன்று மிஞ்சும் சூனியங்களே’ என்று கூறுகின்றனர். ‘அனைத்தையும் நாங்கள் மறுக்கிறோம’ எனவும் கூறுகின்றனர்.     திருக்குர்ஆன் 28:48

நபிமார்கள் கொண்டு வந்த அற்புதங்களை சூனியம் என்று கூறி அவர்கள் மறுத்ததாக மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன. சூனியம் என்றால் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டும் தந்திர வித்தை என்று அவர்களே விளங்கியிருந்ததால் தான் இவ்வாறு கூறி அற்புதங்களை நிராகரித்தனர். உண்மையாகவே நடக்கும் அற்புதம் வேறு. சூனியம் என்னும் ஏமாற்று வித்தை வேறு என்று அவர்கள் விளங்கி வைத்திருந்தனர்.

இதிலிருந்து சூனியத்தால் உடலுக்கோ மனநிலைக்கோ எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது என்பது தெரிகிறது. மேற்கண்ட ஹதீஸ்கள் இதற்கும் முரணாக அமைந்துள்ளன.

இந்த நிலையில் என்ன செய்வது?

குர்ஆனைப் போலவே ஹதீஸ்களும் மார்க்கத்தின் மூல ஆதாரம் என்பதில் ஐயமில்லை. ஆயினும் மிகச் சில ஹதீஸ்கள் குர்ஆனுடன் எந்த வகையிலும் இணைக்க முடியாத நிலையில் உள்ளன. ஏற்கத்தக்கவை என முடிவு செய்யப்பட்ட ஹதீஸ்களில் இத்தகைய ஹதீஸ்கள் சுமார் 50க்கும் குறைவாக உள்ளன.

இவற்றை அப்படியே ஏற்பதால் குர்ஆனின் பல வசனங்களை நிராகரிக்கும் நிலை ஏற்படும். இதைத் தவிர்ப்பதற்காக இத்தகைய ஹதீஸ்களை நாம் ஏற்காது நிறுத்தி வைக்க வேண்டும். திருக்குர்ஆன் மறுக்கப்பட்டாலும் இத்தகைய ஹதீஸ்களை அப்படியே ஏற்பேன் என்று கூற முடியாது.
உதாரணத்திற்காக ஒரு ஹதீஸை நாம் சுட்டிக் காட்டலாம்.

ஒரு குழந்தை அன்னியப் பெண்ணிடம் பால் அருந்தினால் பத்து தடவை அருந்தினால் தான் தாய் என்ற உறவு ஏற்படும் என்று குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் ஐந்து தடவை என்று மாற்றப்பட்டது. அது குர்ஆனில் ஓதப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) மரணித்தார்கள் என்று ஆயிஷா (ரலி-) அறிவிக்கிறார்கள்.       (முஸ்லி-ம் 2634, 2635)

நபிகள் நாயகம் (ஸல்) மரணிக்கும் வரை மேற்கண்ட வசனம் குர்ஆனில் இருந்தது உண்மை என்றால் அது இன்றளவும் இருக்க வேண்டும். ஆனால் ஆயிஷா (ரலி) கூறும் அந்த வசனம் குர்ஆனில் இல்லை.
மேற்கண்ட ஹதீஸை ஏற்றுக் கொண்டால் நபிகள் நாயகத்துக்குப் பின் குர்ஆனில் சில வசனங்கள் நீக்கப்பட்டன என்ற கருத்து வரும். இறைவனோ குர்ஆனை நாம் பாதுகாப்போம் என்கிறான். இதற்கு மாற்றமாக இருப்பதால் இந்த ஹதீஸை நாம் ஏற்காது விட்டு விட வேண்டும். இதை ஏற்று குர்ஆனை நிராகரிக்கும் நிலைக்கு வந்து விடக் கூடாது.

ஸாலிம் எனும் இளைஞர் அபூஹுதைபா (ரலி) வீட்டுக்குள் வந்து போய்க் கொண்டிருந்தார். தமது மனைவியுடன் ஸாலிம் வந்து பேசிக் கொண்டிருப்பது அபூஹுதைபாவிற்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது. இது பற்றி அபூஹுதைபாவின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறிய போது ‘ஸாலிமுக்குப் பாலூட்டு! இதனால் தாய் மகன் உறவு ஏற்பட்டு விடும்’ என்று கூறியதாக முஸ்லிம் 2638, 2636, 2639, 2640 ஆகிய ஹதீஸ்கள் கூறுகின்றன.

அன்னிய இளைஞர் ஒருவருக்குப் பால் கொடுக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) நிச்சயம் கட்டளையிட்டிருக்க மாட்டார்கள். பால் ஊட்டுதல் என்பது இரண்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்குத் தான் பொருந்தும் என்பதால் இந்தச் செய்தியை ஏற்காது நாம் விட்டு வருகிறோம். நம்மால் கண்டுபிடிக்க முடியாத ஏதோ ஒரு குறை இந்த அறிவிப்பில் இருக்கலாம். இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) கூறியிருக்க மாட்டார்கள் என்று முடிவு செய்கிறோம்.
இது போன்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸையும் ஏற்காது நிறுத்தி வைக்க வேண்டும்.
முரண்பட்ட அறிவிப்புக்கள்

மேலும் ஆயிஷா (ரலி) அறிவிக்கும் அந்தச் சம்பவத்தில் பலவிதமான முரண்பாடுகளும் உள்ளன. அது இந்தக் கருத்தை மேலும் அதிகப்படுத்துகின்றது.

சூனியம் வைக்கப்பட்ட பொருள் அப்புறப்படுத்தப்பட்டதா? இல்லையா?
சூனியம் வைக்கப்பட்ட பொருளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்புறப்படுத்தாமல் கிணற்றை மூடினார்கள் என்று புகாரி 5763, 3268, 5766 ஆகிய ஹதீஸ்கள் கூறுகின்றன.

எந்தப் பொருட்களில் சூனியம் வைக்கப்பட்டதோ அந்தப் பொருட்களை அக்கிணற்றிலிருந்து அப்புறப்படுத்தி விட்டீர்களா என்று ஆயிஷா (ரலி) கேட்ட போது ‘அப்புறப்படுத்தவில்லை; அதனால் மக்களிடையே கேடுகள் ஏற்படும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினாh;கள். புகாhp -3268, 5763, 5766
ஆனால், ‘நபி(ஸல்) அவர்கள் உடனடியாக அக்கிணற்றுக்குச் சென்று அப்பொருளை அப்புறப்படுத்தினார்கள்’ என்று புகாரியின் 5765, 6063 வது ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

நபி(ஸல்) அவா;களே சென்று அப்புறப்படுத்தினாh;களா? ஆட்களை அனுப்பி அப்புறப்படுத்தினாh;களா?

அப்பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டதாகக் கூறும் அறிவிப்பிலும் முரண்பாடு காணப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றுக்குச் சென்று அப்பொருளை அப்புறப்படுத்தியதாக, அப்புறப்படுத்தக் கட்டளையிட்டதாக புகாரியின் 5765, 6063 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் நஸயீயின் 4012 வது ஹதீஸில் ஆட்களை அனுப்பி வைத்து அதை அப்புறப்படுத்தியதாகவும், அப்புறப்படுத்திய பொருட்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்ததாகவும் உடனே அவர்கள் குணமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அஹ்மத் 18467 வது ஹதீஸிலும் இந்தக் கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

·    சு+னியம் செய்யப்பட்ட தகவலை அறிவித்தது ஒரு வானவரா? இருவரா?
நபிகள் நாயகம் (ஸல்) அருகில் இரண்டு வானவர்கள் அமர்ந்து தமக்கிடையே பேசிக் கொண்டதாகவும் அதன் மூலம் தனக்கு சூனியம் செய்யப்பட்டதை அறிந்து கொண்டதாகவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக புகாரி 6391வது ஹதீஸ் கூறுகிறது.

நஸயீயின் 4012வது ஹதீஸில் ஜிப்ரீல்(அலை) வந்து ‘உமக்கு யூதன் ஒருவன் சூனியம் வைத்துள்ளான்’ என்று நேரடியாகக் கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட செய்திகளின் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்று அறியப்பட்டாலும் அதில் கூறப்படும் கருத்துக்கள் குர்ஆனுக்கு எதிராக அமைந்துள்ளதாலும், அந்த அறிவிப்புகளில் முரண்பாடு இருப்பதாலும் இந்தச் செய்தியில் ஏற்படும் சந்தேகம் அதிகரிக்கின்றது.

ஸூரதுல் பலக்கும், ஸூரதுந் நாஸூம் சு+னியத்திலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக அருளப்பட்டதா?

திருக்குர்ஆனின் 113, 114வது அத்தியாயங்களின் அடிப்படையிலும் சூனியத்தின் மூலம் அதிசயங்களை நிகழ்த்த இயலும் என்று வாதிடுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்ட போது அதை நீக்குவதற்காக ஃபலக், நாஸ் எனும் அத்தியாயங்கள் அருளப்பட்டன. நபிகள் நாயகத்துக்கு சூனியம் செய்வதற்காக 12 முடிச்சுக்கள் போடப்பட்டிருந்தன. ஒவ்வொரு வசனத்தை ஓதியவுடன் ஒரு முடிச்சு அவிழ்ந்தது என்ற செய்தியின் அடிப்படையிலும் நபிகள் நாயகத்துக்கு சூனியம் செய்யப்பட்டதை நிரூபிக்க முயல்கின்றனர்.

சில தஃப்ஸீர்களில் அறிவிப்பாளர் வரிசையில்லாமல் இவ்வாறு கூறப்பட்டுள்ளதாகவும் இதில் ஏராளமான ஆட்சேபனைகள் உள்ளதாகவும் இப்னு கஸீர் அவர்கள் தமது விரிவுரையில் கூறுகிறார்கள்.
இவ்விரு அத்தியாயங்களும் மக்காவில் அருளப்பட்டதா? மதீனாவில் அருளப்பட்டதா? என்பதிலேயே கருத்து வேறுபாடு உள்ளது என்பது தான் உண்மையாகும்.

அப்துல் ஹமீத் பாகவி அவர்கள் மொழி பெயர்த்த தமிழாக்கத்தில் ‘இவ்விரு அத்தியாயங்களும் மக்காவில் அருளப்பட்டவை’ என்று கூறுகிறார்.
நிஜாமுத்தீன் மன்பயீ அவர்கள் மொழி பெயர்த்த தமிழாக்கத்தில் ‘இவ்விரு அத்தியாயங்களும் மதீனாவில் அருளப்பட்டவை’ என்று கூறுகிறார்.

எங்கே அருளப்பட்டது என்பதற்கே ஆதாரம் கிடையாது என்பதால் 12 முடிச்சுக்கள் அவிழ்ந்ததாகக் கூறுவது கட்டுக்கதை என்பது உறுதியாகிறது.
எனவே இவ்விரு அத்தியாயங்களுக்கும், சூனியத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.

முடிச்சுக்களில் ஊதும் பெண்கள் யார்?

முடிச்சுக்களில் ஊதும் பெண்கள்’ (113:4) என்ற சொற்றொடரை வைத்துக் கொண்டு சூனியத்தினால் அற்புதம் நிகழ்த்த முடியும் என்று வாதிடுகின்றனர்.
முடிச்சுக்களில் ஊதி சூனியம் செய்யும் பெண்களின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடச் சொல்வதால் அவர்களால் தீங்கிழைக்க இயலும் என்பது உறுதியாகிறதே என்று இவர்கள் கேட்கின்றனர்.

இவர்கள் வாதப்படி இந்த அத்தியாயத்தில் சூனியம் வைக்கும் பெண்களிடமிருந்து தான் நாம் பாதுகாப்புத் தேடுகிறோம். ஆண்கள் சூனியம் செய்தால் அதிலிருந்து எந்தப் பாதுகாப்பும் இல்லை என்ற கருத்து வரும்.
முடிச்சுக்களில் ஊதும் பெண்கள் என்பதற்கு சூனியக்காரிகள் என்று அல்லாஹ்வின் தூதர் விளக்கம் கூறவில்லை.

ஹதீஸ்களின் துணையுடன் இதை விளங்கினால் ஷைத்தானைத் தான் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான் என்பதை அறியலாம்.

மனிதன் உறங்கும் போது ஷைத்தான் அவன் தலை மாட்டில் அமர்ந்து இன்னும் இரவு இருக்கிறது. தூங்கு எனக் கூறி மூன்று முடிச்சுக்கள் போடுகிறான். மனிதன் விழித்து விட்டால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவன் உளுஃச் செய்யும் போது இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவன் தொழ ஆரம்பித்ததும் மூன்றாவது முடிச்சும் அவிழ்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 2269, 1142)

முடிச்சு என்றவுடன் நூலில் போடப்படும் முடிச்சு என்று சிலர் நினைத்து விடுகின்றனர். மூஸா நபியவர்கள் தமது நாவில் உள்ள முடிச்சை நீக்குமாறு அல்லாஹ்விடம் கேட்ட போது (20:27) முடிச்சு என்று தான் கூறினார்கள். நாக்கில் முடிச்சு போடப்பட்டுள்ளது என இதைப் புரிந்து கொள்ளக் கூடாது.
மேலும் ஊதுதல் என்ற சொல்லும் ஷைத்தானுடன் தொடர்புபடுத்திக் கூறப்பட்டுள்ளது.

‘ஷைத்தானின் ஊதுதலை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். (அபூதாவூத் 651)

தீய சக்திகளைக் குறிக்கும் போது பெண்பாலாகக் குறிக்கும் வழக்கம் அரபு மொழியில் உள்ளது. இதன் காரணமாகவே பெண்பாலாக இங்கே குறிப்பிடப்படுகிறது. எனவே இவ்விரு அத்தியாயங்களுக்கும் சூனியத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.
மேலும் மனிதர்களிடமிருந்து உம்மைக் காப்பாற்றுவேன் (பார்க்க திருக்குர்ஆன் 5:67)

என்றும் நபிகள் நாயகத்திற்கு அல்லாஹ் உத்திரவாதம் தருகிறான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது உண்மையாக இருந்தால் அல்லாஹ்வின் தூதராக அனுப்பப்பட்டவர்களை அவர்களின் எதிரிகள் தன்னுணர்வு அற்றுப் போகும் அளவுக்கு ஆக்கி விட்டார்கள் எனும் போது நபிகள் நாயகத்தின் ஆன்மீக பலத்தை விட எதிரிகளின் ஆன்மீக பலம் அதிகம் என்ற எண்ணம் ஏற்பட்டு இஸ்லாத்தின் வளர்ச்சியும் தடைப்பட்டிருக்கும். ஆனால் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் எந்தப் பின்னடைவும் ஏற்படவில்லை.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக அறிவிப்பாளர்களைப் பொருத்த வரை ஆதாரப்பூர்வமான செய்திகள் இருந்தாலும் அதை விட ஆதாரப்பூர்வமான திருக்குர்ஆனின் போதனைகளுக்கு முரணாக இருப்பதால் திருக்குர்ஆனுக்கே முதலிடம் கொடுக்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்து அவர்களை யாரும் முடக்கவில்லை என்பது தான் சரியான கருத்தாகும்.

சுனியத்தைக் கற்றுக் கொடுத்த ஹாரூத், மாரூத் ஆகிய இருவரும் மலக்குகளா?

அடுத்து மற்றொரு வசனத்தையும் ஆதாரமாகக் காட்டி சூனியத்தால் எதையும் செய்யலாம் என்று கூறுகின்றனர்.

ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள். அவ்விரு வானவர்களுக்கும் (சூனியக் கலை) அருளப்படவில்லை. ஸுலைமான் (ஏக இறைவனை) மறுக்கவில்லை. பாபில் நகரத்தில் சூனியக்கலையை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத் என்ற ஷைத்தான்களே மறுத்தனர். ‘நாங்கள் படிப் பினையாக இருக்கிறோம். எனவே மறுத்து விடாதே!’ என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவதையே அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர். அல்லாஹ்வின் விருப்பமின்றி யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது. அவர்களுக்குத் தீங்களிப்பதையும், பயனளிக்காததையும் கற்றுக் கொண்டார்கள். ‘இதை விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை’ என்பதை உறுதியாக அவர் கள் அறிந்து வைத்துள்ளனர். தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிய வேண்டாமா?
(அல் குர்ஆன் 2 : 102 )

ஹாரூத், மாரூத் என்பவர்களிடம் மக்கள் வந்து ஸிஹ்ரைக் கற்றுக் கொண்டதாக குறிப்பிடும் இறைவன், அதன் அதிகபட்ச விளைவு என்ன என்பதை நமக்கு அடையாளம் காட்டுகின்றான்.

ஸிஹ்ர் எனும் கலை மூலம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்றிருந்தால் அந்த மிகப்பெரிய பாதிப்பை இறைவன் இங்கே கூறியிருப்பான். அந்த மக்களும் அதனையே கற்றிருப்பார்கள்.

கை, கால்களை முடக்க முடியும் என்றோ, ஒரு ஆளைக் கொல்ல முடியும் என்றோ இருந்திருந்தால் அதைத் தான் அம்மக்கள் கற்றிருப்பார்கள். அல்லாஹ்வும் அதைத் தான் சொல்லியிருப்பான்.

ஸிஹ்ருடைய அதிகபட்ச விளைவு என்னவென்றால் கணவன் மனைவியரிடையே பிளவையும், பிரிவையும் ஏற்படுத்துவது தான் என்பது இதிலிருந்து புலனாகிறது.

அதாவது இருவருடைய உள்ளத்திலும் சந்தேகத் தீயை மூட்டி அதனால் பிரிவை ஏற்படுத்த முடியும். இல்லாத ஒன்றை இருப்பதாகவோ, இருப்பதை இல்லாதது என்றோ மனித மனங்களில் ஐயத்தை ஏற்படுத்த முடியும். இது தான் ஸிஹ்ருடைய அதிகபட்சமான விளைவு.
ஒருவனது கை, கால்களை இந்தக் கலையின் மூலம் முடக்க முடியாது என்றாலும், தனது கைகால்கள் முடங்கி விட்டன என்ற எண்ணத்தை அவனுக்கு ஏற்படுத்த முடியும்.

‘உனக்கு இந்த நபர் இந்த மாதிரியான ஸிஹ்ர் செய்துள்ளார்’ என்று தெரிவித்து விட்டால் அதுவே ஒருவனைப் படுக்கையில் தள்ளிவிடப் போதுமானதாகும். இல்லாததை எல்லாம் இருப்பதாக எண்ண ஆரம்பித்து விடுவான்.
இந்த விளைவைக் கூட திட்டவட்டமாகச் செய்து விட முடியுமா? முடியாது என்கிறான் இறைவன். இதன் மூலம் அல்லாஹ் நாடினால் அன்றி அவர்களால் எந்தத் தீங்கும் செய்ய முடியாது என்று மேற்கண்ட வசனத்தில் தெரிவிக்கின்றான்.

2:102 வசனத்தை ஆதாரமாகக் கொண்டு சூனியம் என்பது உண்மையில் நிகழ்த்தப்படும் அதிசயமே என்று வாதிடுவது தவறு என்பது இதன் மூலம் உறுதியாகின்றது.

அடுத்து நாம் தொpய வேண்டிய அடிப்படை அம்சம் ஒன்று உள்ளது. மலக்குமார்கள் அல்லாஹ்வுக்கு மாறுசெய்ய மாட்டார்கள். அவர்களுக்க அல்லாஹ் கற்றுக்கொடுத்ததை தவிர வேறு எதுவும் தெரியாது.

‘நீ தூயவன்! நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன். ஞானமிக்கவன்’ என்று அவா;கள் கூறினா;. (2:32)
அவர்கள் அல்லாஹ் ஏவியதை மட்டுமே செய்யக் கூடியவர்கள் . எனவே மலக்குமார்கள் சூனியத்தை கற்றுக் கொடுத்தார்கள் என்று கூறுவது அல்லாஹ்தான் அதனைக் கற்றுக்கொடுத்தான் எனக் கூறுவதாகும். அல்லாஹ் ஒருபோதும் வழிகேட்டை கற்றுக் கொடுக்க மாட்டான்.

அடுத்து, “ஷைத்தான்” என்ற பதப்பிரயோகம் உண்மையான ஷைத்தானுக்குப் பயன்படுத்துவது போலவே, மோசமான மனிதர்களுக்கும் பயன்படுத்தப்படுவதுண்டு. அரபியரின் வழக்கத்தில் மட்டுமின்றி, திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் கூட இது போன்ற பிரயோகங்களை நாம் காணலாம்.

எனவே இவ்வசனத்தில் ஹாரூத் மாரூத் என்று கூறப்படுபவர்கள் ஷைத்தான்கள்தான். ஷைத்தான்கள் மனிதர்களிலும் இருக்கின்றார்கள் என பின்வரும் திருறைக் குர்ஆன் வசனங்கள் மூலம் நாம் விளங்கிக் கொள்ளலாம்.
நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது ‘நம்பிக்கை கொண்டுள்ளோம்’ எனக் கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது ‘நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே’ எனக் கூறுகின்றனர்.  (அல்குர்ஆன் 2:14)
இந்த இடத்தில் ஷைத்தான் என்று கூறப்படுவது அவர்களின் தலைவர்களையே என்பதில் ஐயமில்லை.

இவ்வாறே மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை ஒவ்வொரு நபிக்கும் பகைவர்களாக ஆக்கினோம். ஏமாற்றுவதற்காக கவர்ச்சிகரமான சொற்களை அவர்களில் ஒருவர் மற்றவருக்கு அறிவிக்கின்றனர். (முஹம்மதே) உமது இறைவன் நாடியிருந்தால் அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் இட்டுக் கட்டுவதோடு அவர்களை விட்டு விடுவீராக!  (அல்குர்ஆன் 6:112)

அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான். ஜின்களிலும், மனிதர்களிலும் இத்தகையோர் உள்ளனர்.   (அல்குர்ஆன் 114:5, 6)
இந்த வசனங்களிலிருந்து மனிதர்களில் மோசமானவர்களையும் ஷைத்தான்கள் என்று கூறப்படுவதுண்டு என்பதை அறிய முடிகின்றது.
தனியாகப் பயணம் செய்பவன் ஷைத்தான் என்றும் (அபூதாவூத் 2240, திர்மிதீ 1597) , கவிஞர்களை ஷைத்தான் என்றும் (முஸ்லிம் 4193) நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் இந்த வசனத்தில் ஷைத்தான்கள் கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகின்றது. இந்த ஷைத்தான்கள் என்பது உண்மையான ஷைத்தான்களைக் குறிக்கின்றதா? என்ற ஐயம் எழுகின்றது. இந்த ஐயத்தை அகற்றுவதற்கே இறைவன் ‘ஹாரூத் மாரூத்’ என்கிறான்.
அதாவது இவர்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்த ஷைத்தான்கள் யாரெனில் அவர்கள் ஹாரூத் மாரூத் எனும் பெயர் கொண்ட மோசமான மனிதர்களாவர் என்று அடையாளம் காட்டுகிறான்.

அரபு மொழியில் பல அர்த்தங்களுக்கு இடமுள்ள சொல்லைப் பயன்படுத்திவிட்டு அதன் பிறகு விளக்கமாக மற்றொரு சொல் பயன்படுத்தப்படுவதுண்டு. இதை ‘பத்ல்’ என்று அரபு இலக்கணம் கூறும். ஷைத்தான்கள் என்பதன் விளத்ககமே ஹாரூத், மாரூத் என்பது.
யூதர்களுக்கு சூனியக் கலையைக் கற்றுத் தந்தது சுலைமான் நபியுமன்று. மலக்குகளும் அல்லர். மாறாக ஹாரூத், மாரூத் என்ற (மனித) ஷைத்தான்களே கற்றுத் தந்தனர் என்பது இது வரை நாம் கூறியவற்றின் சுருக்கமான கருத்தாகும்.

தப்ஸீர் கலையில் மேதையாகிய இமாம் குர்துபி அவர்கள் ‘இந்த வசனத்திற்குப் பல்வேறு வகையில் அர்த்தம் செய்யப்பட்டாலும் இதுவே மிகச் சிறந்த விளக்கமாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
குர்துபி அவர்கள் குறிப்பிட்ட இந்த விளக்கத்தை இப்னு கஸீர் அவர்களும் தமது தப்ஸீரில் எடுத்தெழுதுகிறார்கள்.

எனவே, மேற்குறித்த ஆதாரங்களின் அடிப்படையில் நபியவா;களுக்கு ச+னியம் செய்யப்பட வில்லை என்பதை உறுதியாக அறியலாம். இன்னும் சொல்லப் போனால், இதன் பிறகும் யாராவது ஒருவா; நபியவா;களுக்கு ச+னியம் செய்யப்பட்டது, அதனால் அவா;கள் பாதிக்கப்பட்டாh;கள் என்றும்  கூறுவாராயின் அவா; பகிரங்க வழிகேட்டிலே இருப்பதாக திருமறைக் குh;ஆன் எச்சாpக்கின்றது.

‘அல்லது இவருக்கு ஒரு புதையல் வழங்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருந்து அதிலிருந்து இவர் உண்ணக் கூடாதா? என்றும் ‘சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள்’ என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர்.  (முஹம்மதே!) அவா;கள் உம்மைப்பற்றி எவ்வாறு உதாரணங்களைக் கூறுகின்றனா; என்பதைக் கவனிப்பீராக! அவா;கள் வழி கெட்டு விட்டனா;. அவா;கள் (நோ;) வழி அடைய முடியாது. (25 : 8-9)

0 comments:

Post a Comment