Monday, April 2, 2012

அப்பாவி பலஸ்தீனர்களை கொன்று உடல் உறுப்புக்ளை திருடும் யூத இராணுவம் !!!


சில வருடங்களுக்கு முன்னர், இஸ்ரேலிய இராணுவம் பாலஸ்தீன கைதிகளை கொன்று உடல் உறுப்புகளை திருடுவதாக ஸ்வீடிஷ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. அப்போது இஸ்ரேலிய அரசு, அதை "யூத விரோத பிரச்சாரம்" என மறுத்திருந்தது. தற்போது அரச மட்டத்திலேயே குறிப்பிட்ட குற்றச்சாட்டு உண்மை தான் என ஒத்துக் கொண்டுள்ளனர்.இப்படி ஒரு மனித தன்மையே இல...்லாமல் அப்பாவி மக்களின் உயிர் களும் உடமைகளையும் நிதம் நிதம் சுராடும் திருடன் இஸ்ரேலுக்கு ஒரு நல்ல பாடம் கூடிய சீக்கிரத்தில் கற்பிக்கத்தான் போகிறார்கள் . i



இதுவெல்லாம் தீவிரவாதம் இல்லை ! மனித உரிமை மீறல் இல்லை !இப்படி அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் கொடூரர்களுக்கு அழிவு என்னமோ பக்கத்தில் தான் இருக்கிறது அமெரிக்காவின்கள்ளக்குலந்தை இஸ்ரேல் நாடே இல்லாமல் பாலஸ்தீன் ஒரு சிறிய பகுதியில் தஞ்சம் புகுந்தவர்கள் உலக கொடூரன் அமெரிக்க உதவி உடன் கொஞ்சம் கொஞ்சமாக முஸ்லிம் மக்களை கொன்று குவித்து அந்த நாட்டின் பெருபான்மை பகுதிகளை பிடித்து விட்டானர்



இந்த கொடூரங்களை எல்லாம் எல்லா நாடுகளும் பார்த்து கொண்டு தான் இருகிறதே தவிர வாய் திறப்பதே இல்லை .தட்டி கேட்க்க


அவர்களுக்கு வாய் இருந்தும் ஊமையாய் .கண் இருந்து குருடனாய் காது இருந்து செவிடனாய் தான் இருக்கிறார்கள் .சரி வேறு ஒரு நாடு அமெரிக்க அணு ஆய்தம் வைத்து இருக்கிறது என்றுஅமெரிக்காவிற்கு நுழைய முடியுமா ? சிந்தித்து பாருங்கள் நண்பர்களே .அவன் நினைத்தால் எந்த ஒரு நாட்டிற்கும் போய் சோதனை என்ற பெயரில் நுழையலாம் .அவன் கட்டுபாடிற்கு வரவில்லை என்றால் அந்த நாடு பயங்கிற அணு ஆய்தம் வைத்து இருக்கிறது என்று அந்த நாட்டை அழிப்பது இது தான் அவர்களுடைய நோக்கம் . ஏன் சில நாடுகள் கண்டும் காணமல் இருக்கிறது என்றால் அதிக அளவு அமெரிக்காவின் இடம் இருந்து கடன் பெற்று இருக்கும் .பணத்தை கொடுத்து வாயே மூடவைகிறான். இவர்களின் ஆணவம் எல்லாம் எத்தனை காலம் தான் நடக்கும் என்று பார்த்து பார்ப்போம் ....



மேலும் விவரகளுக்கு இந்த லின்க்கை கிளிக் செய்யுங்கள்



http://www.guardian.co.uk/world/2009/dec/21/israeli-pathologists-harvested-organs


Wednesday, March 28, 2012

உணர்வு 16-24(Feb 10 - 16,2012)



வாசிக்க வசதியான அளவுகளின் புத்தகத்தை பெற நடுவில் கிலிக் செய்யுங்கள்  

ஏப்ரல் பூல் ? முட்டாள்கள் தினம். இஸ்லாத்தில் ஏற்புடையதா??



வன்னியின் அழைப்பாளன். k.m. ஜவாஹீர் (ஜமாலி)

னித குலத்தின் ஈருல வெற்றிக்கு கருவாக இருக்கின்ற திரு மறைக் குர் ஆன் ஜாஹியாக்காலம் தொட்டு இன்றைய நவீன காலம் வரை ஏற்படுத்திய மாற்றங்களையும் சாதித்த சாதனைகளையும் எழுத ஆரம்பித்தால் பேனாவின் மைக்குப்பிகள் முடிவுற்று விடும்.

நாங்கள் வாழுகின்ற சமகால, தேசிய, சர்வதேச சமூக அமைப்புக்கள். இஸ்லாத்திற்கு முற்றிலும் முரணான ஜாஹிலிய்யத்தின் அடிப்படை அடித்தலத்தில் அமைந்திருப்பதை அவதானிக்கின்றோம்.
அறிவும், ஆராய்ச்சியும் அமோகமாய் முன்னேறிய இன்றைய கால கட்டத்தில் மனிதர்களில் ஒரு சாரார் மௌட்டீகத்திற்கும், பிற்போக்கு சிந்தனைகளுக்கும் கூஜா தூக்குகின்ற அவல நிலையை இன்று கண்கூடாகக் கான்கிறோம். கற்காலத்திலிருந்து பொற்காலத்திற்குத் தாவிய மனிதன் மீண்டும் கற்காலத்திற்கே செல்கிறானோ என அவதானிகள் சிந்திக்குமளவிற்கு மனித குலம் இன்று பாழ்பட்டுப் போயுள்ளது.

கொள்கையற்ற மனிதர்களை கவனிப்பாரற்று விட்டாலும் அங்கீகரிக்கப்பட்ட உயர்ந்த மார்க்கமாகிய இஸ்லாமியக் கொள்கையில் வாழுகின்றோம். எனக்கூறும் முஸ்லிம்களின் நிலையோ மேற்கத்தயக் கலாசாரத்தை விட ஒரு படி முன்னேறிக் காணப்படுகின்றமை ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகிறது.

நவீன நாகரீகம் என்ற பெயரில் இறைஞர் யுவதிகளிடத்தில் கட்டுப்பாடற்ற உறவைத் தோற்றுவிக்கும் அபாயமும், ஆடைக்குறைப்பும், ஒழுக்கச் சீர் கேடுகளும் இன்று பரந்து காணப்படுகின்றது. முஸ்லீம்களைப் பாதுகாக்க வேண்டுமெனின் இன்றைய முஸ்லீம் பாடசாலைகள் இஸ்லாமிய மயப்படுத்தப் படவேண்டும்.

இன்று பல் வேறுபட்ட சமூகத் தீமைகளுக்கு வளி கோர்ப்பது கட்டுப்பாடற்ற ஆண் - பெண் உறவாகும். கல்வி கற்க பாடசாலை செல்லும் அதிகமான மாணவர்களின் புத்தகப் பையில் (school bagளுஉhழழட டீயப) சினிமா நட்சத்திர காவாலிகளின் வண்ணப் புகைப் படங்கள், கிரிக்கட் ஹீரோக்களின் ஸ்டிக்கர்கள், அழகு சினிமா விபச்சாரிகளின் ஆபாஸ அசிங்கமான போட்டோக்கள். விரஸமான ஆபாஷ நூற்கள், மஞ்சல் பத்திரிகைகள், பாட்டுப் புத்தகங்கள், நீலப் பட வீடியோ சீடீக்கள்.

காதல் கடிதங்கள், கையடக்க ரேடியோ, கெமரா போன். போன்ற பொருட்களைக் கானமுடிகின்றது. இவ்வாரு மாணவர்கள் அச்சம் பயம் எதுவுமின்றி இவைகளை பாடசாலைக்கு கொண்டு செல்லுகின்றனர;. அது அதிபர் ஆசிரியர்களின் கட்டுப்பாடும் கண்டிப்பின்மையும், இஸ்லாமிய அறிவு புர்த்தியான முறையில் கற்பிக்கப்படாமையுமே இதற்குக் காரணமாகும்.
இஸ்லாமிய மார்க்கத்தைப் பொருத்த மட்டில் போலிகளையும் சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் அடியோடு நிராகரிக்கும் ஓர் இறைக்கொள்கையது. மனிதனின் பகுத்தறிவுக்கு வேட்டு வைக்கும் அத்தனை கொள்கைகளையும் தூக்கி வீசுமாறு அறிவுருத்தும் இம்மார்க்கத்தில் ஒரு முஸ்லிம் எப்படி ஏப்ரல் பூலை அனுஷ்டிக்க முடியும்?

ஏப்ரல். April Fool.
“ஏய் அதோ பார்றா வானத்திலே வௌ்ள காக்கா பறக்குது”
“ஹலோ மிஸ்டர்” “உங்க ஷூவோட லேஸ் கழண்டிருக்கு”
“அடி உன் ஒரு காது கம்மல காணோம்டி”

இப்படி ஏதாவது ஒன்றைச் சொல்லி எதிரிலிருப்பவரை ஏப்ரல் பூலாக்க ஏப்ரல் 1 அன்று கஜினியாய் முயற்சி செய்துகொண்டிருப்பார்கள். பலர் பள்ளிகளில், கல்லூரிகளில், பணிபுரியும் இடங்களில், பொது இடங்களில் என அனைத்து இடங்களிலும் ஏப்ரல் 1 அன்று இந்த முயற்சி நடக்கும். அடுத்தவரை முட்டாளாக்கப் பார்க்கும் இந்த முட்டாள்களின் தினம் உலகம் முழுவதும் பிரபல்யம்.

பலர் மற்றவர்களின் குடும்பத்தார்களையும் “அடே உன்ட வாப்பா மௌத்தாம்மடா” உன் நாநா “பஸ்ஸில அடிபட்டுவிட்டாராம்டா? என்றெல்லாம் மனிதர்களை ஏமாற்றும் பொய்யர்களாக மாறுகின்றனா். இதனையெல்லாம் நபிகளார் ஒரு போதும அங்கீகரிக்க வில்லை.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ-صلى الله عليه وسلم- « كَفَى بِالْمَرْءِ كَذِبًا أَنْ يُحَدِّثَ بِكُلِّ
مَا سَمِعَ.
“தான் கேள்விப் படுவதையெல்லாம் அறிவிக்கின்ற ஒருவன் அவன் பொய்கூறுகிறான் என்பதற்கு அதுவே போதிய சான்றாகும்.
(முஸ்லிம் - 5789)

இச் செய்தியில் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள். தான் கேள்விப்படுகின்ற அனைத்தையும் ஒரு முஸ்லிம் அறிவிப்பதை வன்மையாகத் தடைசெய்கிறார்கள். அவ்வாறு ஒருவன் அறிவிப்பதே அவன் மிகப் பெரும் பொய்யன் என்பதற்குச் சான்றாகக் கொள்ள வேண்டு மென்றும் கூறுகிறார்கள்.

அப்படியென்றால் நாமாக ஒரு கற்பனையை உருவாக்கி அவற்றுக்கு வடிவம் கொடுத்து அவற்றை சம்பந்தப்பட்டவர்களுக்கு எத்திவைத்து ஏப்ரல் பூலை அனுஷ்டிக்கின்றோம் எனக்கூறுவது நபிவழிக்கு முரணல்லவா?

நபிவழிக்கு மாற்றமாக நடப்பது நரகவழியல்லவா? அன்புக்குரியவர்களே! சிந்தித்துப் பாருங்கள்! அல்லாஹ் தனது அருல் மறையில்.

இறைவிசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வை உண்மையாக அஞ்சிக்கொள்ளுங்கள். உண்மையாளர்களோடு நீங்களும் இருந்துகொள்ளுங்கள் (அல் குர்ஆன் - 9:119)

பொய்யான அனைத்து நடவடிக்கைகளையும் தடை செய்யும் இம்மார்க்கத்தில் எங்கனம் ஏப்ரல் பூலுக்கு அனுமதியிருக்கும்?

ஏப்ரல் பூலோ, மீலாது விழாக்களோ, பிறந்ததின விழாக்களோ இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்டவையல்ல.

மாறாக மாற்றுமத இதிகாசங்களிலிருந்தும், புராணங்களிலிருந்தும் இஸ்லாமியப் போர்வையில் தருவிக்கப்பட்டவையே! இஸ்லாமிய மார்க்கத்தின் மகத்துவமும் அதன் உயர்வும் தெரியாத அறிவிலிகளால்தான் இச்சடங்குகள் எமது மார்க்கத்தினுல் புகுத்தப்பட்டன. இதனைத் தான் நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்தார்கள்.

عَنْ عَائِشَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، قَالَتْ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ فَهُوَ رَدٌّ.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
எங்களது இம்மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யார் புதிதாக உருவாக்குகின்றாரோ அது நிராகரிக்கப்படும்.
(புஹாரி - 2697)
நன்மையான விடயம்தானே செய்வதனால் என்ன குறைந்துவிடப்போகின்றது…?
ஏப்ரல் பூலை பகிடிக்கு அனுஷ்டிப்பதால் என்ன வந்துவிடப் போகின்றது..?
போன்ற அற்பத்தனமான கேள்விகளை அடுக்கி அல்லாஹ்வின் தூதரின் முன்மாதிரியில்லாத இம்மடமைத் தனங்கலுக்கு இரகசிய அங்கீகாரத்தை எடுப்பதற்கு சில இளைஞர்கள் விரும்புகின்றனர்.

இஸ்லாமிய சட்டக்கோவையில் ஒருமனிதனை ஏமாற்றுவது உரிமை மோசடி எனக்கொள்ளப்படுகின்றது. ஏப்ரல் பூல் எனும் பெயரில் இன்று எத்தனையோ தொழிலதிபர்கள், கல்விமான்கள், இணையதள வாசகர்கள், சுத்தமாக ஏமாற்றப்படுகிறார்கள்.

செய்தி ஊடகங்களும் இந்நாளில் தன் பங்கிற்கு மக்களுக்கு தவறான, சாத்தியமற்ற செய்திகளை வழங்கி மக்களைப் பரிதவிக்க விடுகின்றனர். “பில்கேட்ஸ்” புனித இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டார். “புஷ் “நாஸ்தீகக் கொள்கைக்குத் தாவி விட்டார்” எனப் பரவிய வதந்திகள் இதற்கு சிறந்ததொரு சான்றாகும்.

இறுதியாக இஸ்லாமியர்களான நாங்கள் இஸ்லாத்தின் தனித்துவத்தை கட்டிக்காப்பதிலும், இஸ்லாம் ஓர் நாகரீகமான வாழும் கொள்கை என்பதை சர்வதேச உலகுக்கு எடுத்துச் சொல்லுவதிலும் முன்மாதிரியாக வாழ்வோமாக!

எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தை சத்தியமாகவும், அசத்தியத்தை அசத்தியமாகவும் காட்டி நேரான பாதையில் நாம் வாழ அருள் பாலிப்பானாக.

Sunday, February 5, 2012

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - மாபோலையில்


சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்,

தவிர்க்க முடியாத காரணங்களினால் கடந்த 03 வாரங்களாக www.sltjfm.com ஊடாக நடாத்தப்பட்டு வந்த மின்னஞ்சல் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெறவில்லை. கடந்த 03 வாரங்களில் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்ட கேள்விகளுக்கும் இந்த நிகழ்ச்சியிலையே பதிலளிகப்படும். இன்ஷா அல்லாஹ் அனைத்து சகோதரர்களும் நிகழ்ச்சியில் தவறாமல் இனைந்து கொள்ளுங்கள்

Monday, January 30, 2012

பார்வையைப் பாதுகாப்போம்

கே.எம். அப்துந் நாஸிர், கடையநல்லூர்.
உண்மையான இறைநம்பிக்கையாளர்களிடம் இருக்க வேண்டிய பல்வேறு பண்புகளை அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் விவரித்துள்ளான். அவற்றில் மிக முக்கியமான ஒன்றுதான் நம்முடைய பார்வையைப் பாதுகாப்பதாகும். இந்த மனித சமுதாயம் ஒழுக்க வீழ்ச்சியடைவதற்கு மிக முக்கியமான ஒரு காரணி பார்வையை தவறான முறையில் பயன்படுத்துவதாகும். இதன் காரணமாகத்தான் இறைநம்பிக்கையாளர்களான ஆண்களும் பெண்களும்  தங்களின் பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என இறைவன் தன் திருமறையில் கட்டளையிடுகின்றான் 
.
(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
      தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! (அல் குர்ஆன் 24 : 30, 31)
 
தங்களின் பார்வையைப் பாதுகாத்துக் கொள்வதுதான் இறைநம்பிக்கையாளர்களுக்கு பரிசுத்தமானது என மேற்கண்ட வசனம் தெளிவுபடுத்துகிறது. ஏனென்றால் இன்றைக்கு விபச்சாரம், கற்பழிப்பு போன்ற பல்வேறு பெரும்பாவங்களுக்கு அடிப்படையாகத் திகழ்வது பார்வைதான்.
      இன்றைய உலகில் பத்ரிகைகள் வாயிலாகவும், ஆபாசப் புத்தகங்கள் வாயிலாகவும், தொலைக்காட்சிப் பெட்டிகளின் வாயிலாகவும், இணையதளங்களின் மூலமாகவும் பல்வேறு விதமான ஆபாசக் காட்சிகள் வெளியிடப் படுகின்றன. அழகிய பெண்களின் அறைகுறை ஆடையுடன் கூடிய காட்சிகள் காட்டப்படுகின்றன 
.
சாதாரண செய்திப் பத்ரிகைகள் முதல் வார இதழ், மாத இதழ் போன்ற எந்த ஒரு பத்ரிகையும் இதற்கு விதிவிலக்கல்ல, அனைத்து இதழ்களிலும் இது போன்ற ஆபாசப் படங்கள் வெளியிடப்படுகின்றன. ஆபாசப் படங்களை வெளியிடாத பத்திரிகைகளின் விற்பனை கூட குறைந்து விடுவதால் விற்பனைக்காகவே இது போன்ற காட்சிகளை அதிகம் வெளியிடுகின்றனர்.
கிரிக்கெட் என்ற விளையாட்டை சாதரணமாகப் பார்ப்பதில் தவறில்லை என்ற நமக்கு நாமே ஒரு காரணத்தைக் கூறிக் கொண்டு அதனை பார்த்து வருகின்றோம். ஆனால் அந்த விளையாட்டின் மத்தியில் அரை குறை மங்கைகளை ஆடவிட்டு காட்டுகின்ற காட்சிகளும் அதிகம் இடம்பெறுகின்றன. இடைஇடையே காட்டப்படும் விளம்பரங்களில் கூட ஏராளமான அரைகுறை காட்சிகள் காட்டப்படுகின்றன. இவற்றைப் பற்றி நாம் யாரும் சிந்திப்பதில்லை 
.
      இளைஞர்கள் பலர் இது போன்ற தவறான காட்சிகளின் காரணமாக தங்களுடைய மனதை அலைபாய விடுகின்றனர். இதனால் அவர்களுடைய கல்வித் தரம் குறைகிறது. வாழ்க்கையில் எந்த ஒரு துறையிலும் ஈடுபாடில்லாமல் தவறான பாதையில் சென்று தங்களுடைய எதிர்கால வாழ்வையே சீரழித்து விடுகின்றனர். இன்றைய உலகில் மிக வேகமாகப் பரவி வரும் எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்களுக்கு அடிப்படைக் காரணம் தவறான உடலுறவுதான் என்றாலும் அத்தகைய தவறான உறவைத் தூண்டக்கூடிய மிக முக்கிய காரணி ஆபாசக் காட்சிகளைப் பார்ப்பதுதான் 
.
இதனால்தான் நம்முடைய இஸ்லாமிய மார்க்கம் தவறான காட்சிகளை பார்ப்பதைக் கூட விபச்சாரம் என்கிறது 
.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபச்சாரம் மட்டுமல்ல கண்ணும் நாவும் கூட விபச்சாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபச்சாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் (பாலுணர்வைத் தூண்டும் பேச்சாகும்). மனம் ஏங்குகிறது இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவையனைத்தையும் உண்மையாக்குகிறது அல்லது பொய்யாக்குகிறது.
அறிவிப்பவர் : அபூஹரைரா (ரலி) நூல் : புகாரி (6243)
 
மனதைக் கெடுக்கக்கூடியது தவறான பார்வைதான் என்பதை நபி (ஸல்) அவர்கள் மேற்கண்ட ஹதீஸில் மிக அற்புதமாக விளக்கியுள்ளார்கள். தவறான பார்வைதான் அதிகமான பாவங்களுக்கு அடிப்படையாகத் திகழ்வதால் நபி (ஸல்) அவர்கள் அதற்குரிய அனைத்து வாசல்களையும் அடைப்பதற்கு நமக்கு வழிகாட்டியுள்ளார்கள். அவற்றில் சிலவற்றை நாம் காண்போம் 
.
உரிய வயதில் திருமணம் செய்தல்
ஆண்களோ பெண்களோ அவர்கள் பருவ வயதை அடைந்து பாலியல் ரீதியான நாட்டங்கள் அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டால் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது பெற்றோர்கள் மீது கடமையாகும். இன்றைக்கு நம்முடைய சமுதாயத்தில் திருமணம் என்பது ஒரு பாரதூரமான காரியமாக ஆக்கப்பட்டுவிட்டது. வரதட்சணை போன்ற கொடுமைகளின் காரணமாக பெண்களுக்குரிய திருமண காலம் தாமதமாகின்றது. அது போன்று பல ஊர்களில் ஆண்களுக்கு வேண்டுமென்றே திருமணகாலம் தாமதிக்கப்படுகிறது. அண்ணன் திருமணத்தில் நாட்டமில்லாதவறாக இருந்தால் அவருக்கு திருமணமாகின்ற வரை அவருடன் பிறந்த சகோதரர்களுக்கும் திருமண காலங்கள் பிற்படுத்தப்படுகின்றன. இதனால் பலர் மன நோய்களுக்கு ஆளாகின்றனர். தவறான பல காரியங்களைச் செய்வதற்குத் துணிகின்றனர் 
.
இது போன்ற நிலை ஏற்பட்டு விடக்கூடக்கூடாது என்பதற்காகத்தான் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கட்டளையிடுகின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் இளைஞர்களே உங்களில் யார் திருமணத்திற்கான செலவினங்களுக்கு சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் செய்யட்டும். ஏனெனில் திருமணம் (அந்நியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும். கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும்
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் (ரலி) நூல் : புகாரி (1905)
மேற்கண்ட செய்தியில் உரிய வயதில் தகுதியுடையவர்கள் திருமணம் செய்வதும், அதற்கு இயலவில்லையென்றால் இறையச்சத்தை வளர்க்கும் நோன்பை நோற்பதும் நம்முடைய தவறான பார்வைக்குத் திரையாக அமையும் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும் 
.
வீதியில் செல்லும் போது பார்வையைத் தாழ்த்துதல்
இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்ட வசனங்களில் இறைநம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் வீதிகளில் தங்களுடைய பார்வைகளைத் தாழ்த்தியவர்களாத்தான் செல்ல வேண்டும் என்ற இறைக்கட்டளையை நாம் பார்த்தோம். பார்வையைத் தாழ்த்தி வீதிகளில் நடந்து செல்வது வீதிக்கும் செய்ய வேண்டிய கடமை என நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள். இன்றைய காலங்களில் நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்த பெண்களில் ஒரு பகுதியினரும் மிக அதிகமாக மாற்று சமுதாயப் பெண்களும் தங்களுடைய அலங்காரங்களையும், அங்கங்களையும் வெளிப்படுத்திக் கொண்டுதான் வீதியில் நடமாடுகின்றனர். பல இஸ்லாமிய நாடுகளிலும் இது போன்ற அவல நிலைதான் நீக்கமற நிறைந்து காணப்படுகிறது. இந்நிலையில் உண்மையான முஃமின்கள் தங்களுடைய பார்வைகளைத் தாழ்த்திக் கொண்டால் தான் தங்கள் மனதை அசுத்தத்திலிருந்து பரிசுத்தப்படுத்த முடியும். தங்களுடைய பார்வைகளை உலாவ விடுபவர்கள் நிச்சயம் பல விதமான மனோ இச்சைகளுக்கு அடிமையாவதிலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாது. பின்வரக்கூடிய நபி (ஸல்) அவர்களின் உபதேசத்தை நாம் பின்பற்றி நடந்தால் நம்முடைய மனதை வழிகெடுவதிலிருந்து நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும் 
.
''நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிருங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். '' மக்கள் ''எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறுவழியில்லை. அவைதாம் நாங்கள் பேசிக்கொள்கின்ற எங்கள் சபைகள்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் '' அப்படியென்றால் நீங்கள் அந்த சபைகளுக்கு வந்துதான் ஆகவேண்டுமென்றால் பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள் '' பாதையின் உரிமை என்ன?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் '' பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும், (பாதையில் செல்வோருக்கு சொல்லாலோ, செயலாலோ) துன்பம் தராமல் இருப்பதும். ஸலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும் , தீமையிலிருந்து தடுப்பதும் அதன் உரிமைகள் ஆகும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ரலி) நூல் : புகாரி ( 2466)
      மற்றொரு அறிவிப்பில் '' அழகிய பேச்சைப் பேசுதலும்'' பாதைக்குச் செய்ய வேண்டிய கடமையாகக் கூறப்பட்டுள்ளது.
அறிவிப்பவர் : அபூ தல்ஹா (ரலி) நூல் முஸ்லிம் ( 4020 )
அந்நியப் பெண்களை விட்டும் பார்வையைத் திருப்புதல்
இஸ்லாமிய எந்த முறையில் எதற்காக அந்நியப் பெண்களை பார்ப்பதற்கு அனுமதியளிக்கிறதோ அதுவல்லாத முறைகளில் அந்நியப் பெண்களை நாம் பார்ப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். பெண்கள் யார் யார் முன்னிலையில் பர்தா அணியாமல் இருக்க இஸ்லாம் அனுமதிக்கிறதோ அவர்களைத் தவிர மற்ற அனைத்து ஆண்கள் முன்னிலையிலும் தங்களை மறைத்துதான் இருக்க வேண்டும்.
அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள்,107 ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள். (அல் குர்ஆன் 24 : 30, 31)
பர்தாவைப் பேணாத பெண்கள் முன்னிலையில் நாம் பேசுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் அது போன்று தனிமையில் பேசுவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் நபி (ஸல்) அவர்களிடம் (அன்னியப் பெண் மீது) திடீரெனப் படும் பார்வையைப் பற்றிக் கேட்டேன். நான் என்னுடைய பார்வையைத் திருப்ப வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். நூல் : திர்மிதி (2700)
 (இளைஞரான) ஃபழ்ல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின் (ஒட்டகத்தில்) அமர்ந்து கொண்டிருந்த போது ''கஸ்அம்'' கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபழ்ல் அப்பெண்ணைப் பார்க்க அப்பெண்ணும் இவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபி (ஸல்) அவர்கள்) ஃபழ்லின் முகத்தை வேறு திசையில் திருப்பினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) நூல் : புகாரி (1513)
(இதைக் கண்ட) அப்பாஸ் (ரலி) அவர்கள் '' அல்லாஹ்வின் தூதரே எதற்காக நீங்கள் உங்களுடைய சிறிய தந்தையின் மகனின் கழுத்தை திருப்பினீர்கள் என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள் '' ஒரு இளைஞனையும், இளம்பெண்ணையும் நான் பார்த்தேன். அவ்விருவருக்கு மத்தியில் ஷெய்தான் நுழைவதை நான் அஞ்சுகிறேன் என்று கூறினாரகள்.   நூல் : திர்மிதி
இறைவனை அஞ்சி வாழ்தல்
எல்லாவற்றுக்கும் மேலாக நாம் தனிமையில் இருக்கும் போதும் கூட்டாக இருக்கும் போதும் இறைவனை அஞ்சிக் கொள்ள வேண்டும். தவறான பத்ரிகைகள் தொலைக்காட்சி காட்சிகள் இணையதளங்கள் போன்றவற்றை பார்ப்பதை விட்டும் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய பார்வைகளுக்காகவும் நாம் மறுமையில் விசாரிக்கப்படுவோம் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நம்முடைய பார்வைகளும் நமக்கெதிராக மறுமையில் சாட்சி சொல்லும் என்பதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த பயம் இருந்தால்தான் நாம் நம்முடைய பார்வையைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்
உமக்கு அறிவு இல்லாததை நீ பின்பற்றாதே! செவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை.
(அல்குர்ஆன் 17 ; 36)
அல்லாஹ்வின் பகைவர்கள் நரகை நோக்கித் திரட்டப்படும் நாளில் அவர்கள் வகைப்படுத்தப்படுவார்கள். முடிவில் அவர்கள் அங்கே வந்த தும் அவர்களுக்கு எதிராக அவர்களின் செவி யும், பார்வைகளும், தோல்களும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும். ''எங்களுக்கு எதிராக ஏன் சாட்சி கூறினீர்கள்?'' என்று அவர்கள் தமது தோல் களிடம் கேட்பார்கள். ''ஒவ்வொரு பொருளையும் பேசச் செய்த அல்லாஹ்வே எங்களையும் பேசச் செய்தான். முதல் தடவை அவனே உங்களைப் படைத்தான். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்பட்டுள்ளீர்கள்!'' என்று அவை கூறும். (அல் குர்ஆன் 41 : 30)
கண்களின் (சாடைகள் மூலம் செய் யப்படும்) துரோகத்தையும், உள்ளங்கள் மறைத்திருப்பதையும் அவன் அறிவான். (அல் குர்ஆன் 40 : 19)
அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன் (அல் குர்ஆன் 6 : 103)
இறைவன் எந்நேரமும் நம்முடைய கண்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்கின்ற இறையச்சம்தான் தவறான பார்வைகளை விட்டும் நம்மை பாதுகாக்கும் திரையாகும்